Thursday, February 17, 2011

சிவராத்திரி

மாசி மாதம் சிவராத்திரி வரும். சிவனுக்கு அன்று புட்டு, சக்க‍ ரை வள்ளிக் கிழங்கு(உப்பு போட்டு வேக வைத்தது), சுண்டல், வடை, பயத்த‍ங்கஞ்சி எல்லாம் செய்து நைவேத்தியம் செய்வார்கள். அன்று காலையிலிருந்து விரதம் இருப்ப‍வர்கள் ஒன்றும் சாப்பிடாமல் இரவு தான் சாப்பிடுவார்கள். (காலையில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுக் கொள்ள‍லாம்).

புட்டு ஏற்கனவே செய்முறையில் உள்ள‍படி செய்ய‍வும்.
சக்க‍ரவள்ளிக்கிழங்கில் உப்பு போட்டு வேக வைக்கவும்.
கடலைப்பருப்பு சுண்டல் 1/2 டம்ளர் போட்டு செய்ய‍வும்.

ப‌யறு சூடு பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து வெல்ல‍ம் போட்டு ஏலக்காய் போட்டு செய்ய‍வும்.

சிவன் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் நாமாவளிகள் சொல்லி, அர்ச்ச‍ னை செய்து (வில்வம் மிக விசேசம்) தேங்காய் , பழம், வெத்த‍ லை பாக்கு வைத்து பூசை செய்ய‍வும்.

No comments:

Post a Comment