Monday, August 15, 2022

Gokulashtami list for 2022

 1. Mullu Murukku - Wednesday afternoon

2. Thenguzhal - Wednesday Afternoon

9. Sigili urunday - Wednesday 

3. Seedai  - Thursday Morning 

4. Vella seedai  - Thursday Morning 

5. appam  - Thursday afternoon (3 pm)

6. aval - Thursday 

7. pal payasam - Thursday 

8. sundal - Thursday 


Tuesday - shopping or measure and keep things ready for next day, 

Also select dress for kids and arrange 

Get pooja planned. 

Thursday afternoon 5 pm - get krishna ready and put kolam in the home 

Thurday 6 pm - get kids dressed 

Thursday 6:30 pm - Pooja starts 

Diwali list in 2020

 pal khoa 

gulab jamun 
coconut buffi
Karachi halwa
maida biscuit
thenguzhal murukku
aval mixture

Monday, October 4, 2021

நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல்

நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல்

நாள்நைவேத்தியம்சுண்டல்
1வெண்பொங்கல்வெள்ளை கொண்டகடலை
2புளியோதரைபயத்தம்பருப்பு
3சக்கரைப்பொங்கல்மொச்சை
4கதம்ப சாதம்பச்சைபட்டாணி
5தயிர் சாதம்வேர்க்கடலை
6தேங்காய் சாதம்கடலைப்பருப்பு
7எலுமிச்சம் சாதம்வெள்ளை பட்டாணி
8பாயசம்காராமணி
9அக்காரவடிசல்சாதா கொண்டைகடலை

 செவ்வாய் மற்றும் வெள்ளி யன்று புட்டு அல்லது சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல் செய்யலாம்.

Sunday, August 15, 2021

Planning for வரலக்சுமி விரதம்

1. Monday - plan and pack the return gifts for the ladies and kids coming on Friday/Saturday 2.Tuesday - Shopping 3. Wednesday - Pacharisi idly prep 4. Wednesday - Sweet pooranam 5. Wednesday - Ellu pooranam 6. Thursday - Get the kalasam ready - Get saradu ready 7. Plan kids dresses, and my saree for morning and evening Shopping list: 1. Thengai 2. Flowers 3. Maavilai 4. Vethalai 5. Pazham' 6. Rice flour 7. Lemon 8. Thazhambu

நாள்to-do
Tuesday    shopping1. thengai, 2. flowers, 3. Maavilai, 4. vethalai, 5. pazham 6. rice flour 7. lemon 8. thaazhambu 
Wednesday  பச்சரிசி இட்லி prep, 
sweet poornam, 
ellu pooranam

Thursday    Get the Kalasam ready, Saradu ready 
Friday        Pooja


Wednesday, August 21, 2019

seedai

vella seedai :
 Rice flour - 1 cup
urad flour - 1 tbsp
jaggery 3/4 cup (water - 1/4 cup)
elakkai - 1 tsp
ghee - 1 tsp
coconut - 2 tsp
sesame seed - 1 tsp


uppu seedai :
 Rice flour - 1 cup
urad flour - 2 tbsp
elakkai - 1 tsp
ghee - 2 tsp
coconut - 2 tsp
salt

Wednesday, December 26, 2012

மாட்டுப் பொங்கல்



பொங்கலுக்கு அடுத்த‍ நாள் மாட்டுப் பொங்கல். முதல் வடித்த‍ சாதத்தில், கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டு, மஞ்சள் கலர் சாதம், சிவப்பு சாதம், சக்க‍ ரை பொங்கல், வெண் பொங்கல், தயிர் சாதம், எல்லாம் பிசைந்து, முதல் நாள் இரவு ரெடி செய்து கொண்டு, மறு நாள் காலையில் சூரிய உதயத்தின் போது, சூரிய வெளிச்ச‍ம் படும் முற்ற‍த்திலோ, மாடியிலோ, கனுப் பொங்கல் வைக்க‍ வேண்டும்.

கோலம் போட்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, மஞ்சள் இலையை மூன்றாகப் போட்டு,அதில் கலந்து பிசைந்த சாதத்தைக் கிள்ளி வைக்க‍ வைண்டும். பிள்ளையாருக்கு விளக்கேற்றி வைத்து, வெற்றிலை பாக்கு, பழம் நைவேத்தியம் செய்து, கற்பூரம் காட்டி, மீதி சாதத்தைக் கரைத்து ஆரத்தி எடுத்து கொட்டிவிட வேண்டும். பிறந்த வீட்டில் சகோதரன் சகோதரிகள் நன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்த‍ னை செய்து,

காக்கா பிடி வைத்தேன், கன்றுப் பிடி வைத்தேன், காக்காய்க்கும், கன்றுக்கும் கல்யாணம், குருவிக்கெல்லாம் கொண்டாட்ட‍ம்,
காக்கா கூட்ட‍ம் கலைந்தாலும்,
எங்கள் கூட்ட‍ம் கலையக் கூடாது

என்று சொல்லிக் கொண்டே கனு வைப்பார்கள்.

கனு வைக்கும் முன் வீட்டில் உள்ள‍ பெரியவர்களிடம் மஞ்சள் கிழங்கைக் கொடுத்து, நெற்றியில் மூக்கில் தேய்த்துவிடச் சொல்லி, நமஸ்காரம் செய்ய‍ வேண்டும். கனு வைத்து விட்டு, குளித்து விட்டுத் தான் அடுப்பு பற்ற‍ வைப்பார்கள். அன்று கலந்த சாதம் எல்லாம் செய்வார்கள். அன்று உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லாரையும் கண்டு நலன் விசாரித்து பொங்கல் வாழ்த்துச் சொல்லுவார்கள். இது காணும் பொங்கல் என்றும் அழைக்க‍ப் படும்.

தை வெள்ளிக் கிழமை விசேசமானது. நான்கு வெள்ளிகளில், ஏதாவது ஒரு வெள்ளி, வீட்டில், நாமகரி அம்ம‍னுக்கு மாவிளக்கு போட்டு பாம்பு புற்று இருந்தால், அதற்கும், மாவிளக்கு போட்டு, பால் ஊற்றி விட்டு வரலாம்

தைப் பொங்கல்


ஒரு வெண்கலப் பானையில் வெல்ல‍ம் போட்ட‍ சக்க‍ ரைப் பொங்கலும், இன்னொன்றில் வெண் பொங்கலும் செய்ய‍ வேண்டும். பொங்கலன்று காலையில் வாசலுக்கு பெரிய கோலமாக போட வேண்டும். பிறகு குளித்து விட்டு நல்ல‍ நேரம் பார்த்து பொங்கல் பானையை அடுப்பில் வைக்க‍ வேண்டும்.

சக்க‍ ரைப் பொங்கல்
பச்ச‍ரிசி 2 டம்ளர்
பாசிப்பருப்பு அரை டம்ளர்
வெல்ல‍ம் 3 டம்ளர்
ஏலக்காய் பொடி
முந்திரிப்ப‍ருப்பு - 20


பச்ச‍ரிசியையும், பாசிப்ப‍ருப்பையும், சுடபண்ணிக் கொண்டு நன்றாக கழுவி, 2, 3 முறை நீர் களைந்து விட்டு, 3ஆம் முறை எடுக்கும் நீரைப் பாத்திரத்தில் ஊற்ற‍ வேண்டும். சிறிது பால் விட்டு அரை வாழைப்பழம் போட்டு சுவாமி இடத்தில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு நல்ல‍ நேரத்தில் அடுப்பில் ஏற்றவும். தண்ணீரும் பாலும் பொங்கி வரும் போது, அரிசி பருப்பை அதில் போட வேண்டும். அரிசி நன்றாக வெந்து பொங்கி வரும்போது, அட்சதை போட்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லி அடுப்பிற்கு நமஸ்காரம் செய்ய‍வும். பொங்கலில், ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து விட்டு, அரிசி பருப்பு குழைந்ததும், வெல்ல‍த்தைப் போட்டு, வெல்ல‍ம் கரைந்து வரும்போது, கால் கப் நெய்யை அதில் ஊற்ற‍வும். ஏலக்காய் படி செய்து போடவும். இறக்கி வைத்து, 1 சிட்டிகை ஜாதிக்காய் நெய்யில் பொரித்து, பொடி செய்து போடவும். முந்திரி, திராட்சை பொரித்து அதில் சேர்க்க‍வும். சக்க‍ ரை பொங்கல் ரெடி.


வெண்பொங்கல், மேல் சொன்ன‍ மாதிரியே அரிசியும் பருப்பும் சேர்த்து வெந்ததும், தேவையான உப்பு போடவும். வாணலியில் நெய் விட்டு, மிளகு, சீரகம் பொடி செய்து, முந்திரிப்ப‍ருப்பு, இஞ்சித் துண்டு, கறிவேப்பிலை தாளித்து, பொங்கலில் சேர்க்க‍வும். கொஞ்சம் பெருங்காயம் போடவும். வெண் பொங்கல் ரெடி.

பொங்கலன்று, மொச்சை, வாழைக்காய், பரங்கிக்காய், அவரைக்காய், பூசணிக்காய் போட்டு புளிக்கூட்டு செய்வார்கள். சாதம், பருப்பு, சக்க‍ ரைப் பொங்கல், வெண்பொங்கல், கூட்டு, தேங்காய், வெற்றிலை, பாக்கு பழம், கரும்பு, மஞ்சள் கொத்து எல்லாவற்றையும் வைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, சூரியன் சந்திரன் படம் வரைந்து, அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு பூப்போட்டு கற்பூரம் காண்பித்து, பூஜையை முடிக்க‍ வேண்டும்.