Wednesday, December 26, 2012

தைப் பொங்கல்


ஒரு வெண்கலப் பானையில் வெல்ல‍ம் போட்ட‍ சக்க‍ ரைப் பொங்கலும், இன்னொன்றில் வெண் பொங்கலும் செய்ய‍ வேண்டும். பொங்கலன்று காலையில் வாசலுக்கு பெரிய கோலமாக போட வேண்டும். பிறகு குளித்து விட்டு நல்ல‍ நேரம் பார்த்து பொங்கல் பானையை அடுப்பில் வைக்க‍ வேண்டும்.

சக்க‍ ரைப் பொங்கல்
பச்ச‍ரிசி 2 டம்ளர்
பாசிப்பருப்பு அரை டம்ளர்
வெல்ல‍ம் 3 டம்ளர்
ஏலக்காய் பொடி
முந்திரிப்ப‍ருப்பு - 20


பச்ச‍ரிசியையும், பாசிப்ப‍ருப்பையும், சுடபண்ணிக் கொண்டு நன்றாக கழுவி, 2, 3 முறை நீர் களைந்து விட்டு, 3ஆம் முறை எடுக்கும் நீரைப் பாத்திரத்தில் ஊற்ற‍ வேண்டும். சிறிது பால் விட்டு அரை வாழைப்பழம் போட்டு சுவாமி இடத்தில் வைத்து நமஸ்காரம் செய்து விட்டு நல்ல‍ நேரத்தில் அடுப்பில் ஏற்றவும். தண்ணீரும் பாலும் பொங்கி வரும் போது, அரிசி பருப்பை அதில் போட வேண்டும். அரிசி நன்றாக வெந்து பொங்கி வரும்போது, அட்சதை போட்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லி அடுப்பிற்கு நமஸ்காரம் செய்ய‍வும். பொங்கலில், ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து விட்டு, அரிசி பருப்பு குழைந்ததும், வெல்ல‍த்தைப் போட்டு, வெல்ல‍ம் கரைந்து வரும்போது, கால் கப் நெய்யை அதில் ஊற்ற‍வும். ஏலக்காய் படி செய்து போடவும். இறக்கி வைத்து, 1 சிட்டிகை ஜாதிக்காய் நெய்யில் பொரித்து, பொடி செய்து போடவும். முந்திரி, திராட்சை பொரித்து அதில் சேர்க்க‍வும். சக்க‍ ரை பொங்கல் ரெடி.


வெண்பொங்கல், மேல் சொன்ன‍ மாதிரியே அரிசியும் பருப்பும் சேர்த்து வெந்ததும், தேவையான உப்பு போடவும். வாணலியில் நெய் விட்டு, மிளகு, சீரகம் பொடி செய்து, முந்திரிப்ப‍ருப்பு, இஞ்சித் துண்டு, கறிவேப்பிலை தாளித்து, பொங்கலில் சேர்க்க‍வும். கொஞ்சம் பெருங்காயம் போடவும். வெண் பொங்கல் ரெடி.

பொங்கலன்று, மொச்சை, வாழைக்காய், பரங்கிக்காய், அவரைக்காய், பூசணிக்காய் போட்டு புளிக்கூட்டு செய்வார்கள். சாதம், பருப்பு, சக்க‍ ரைப் பொங்கல், வெண்பொங்கல், கூட்டு, தேங்காய், வெற்றிலை, பாக்கு பழம், கரும்பு, மஞ்சள் கொத்து எல்லாவற்றையும் வைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, சூரியன் சந்திரன் படம் வரைந்து, அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு பூப்போட்டு கற்பூரம் காண்பித்து, பூஜையை முடிக்க‍ வேண்டும்.


No comments:

Post a Comment