Wednesday, April 4, 2012

மசால் வடை

பட்டாணி பருப்பு - 200
அல்லது
கடலைப்பருப்பு - 1 டம்ளர்
துவரம் பருப்பு - 1/2 டம்ளர்
உளுந்து - 1 ஸ்பூன்
பாசிபருப்பு - 1/4 டம்ளர்
(ஊற வைக்க‍வும்)

க‌டலைபருப்பும் துவரம்பருப்பையும் ஒன்றாக ஊற வைக்க‍வும். 1 மணி நேரம் ஊறினால் போதும். நன்றாக அலம்பி கல் இல்லாமல் வடிய விடவும். 2 ப•மிளகாய், 2 வரமிளகாய், இஞ்சி 1 துண்டு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை போட்டு, இரண்டு பருப்பையும், லேசாக தண்ணீர் தெளித்து அரைக்க‍வும். கொரகொரவென்று கெட்டியாக அரைக்க‍வும். சுவாமிக்கு வெங்காயம் போடாமல், நான்கு தட்டி நெய்வேத்யம் செய்துவிட்டு, மீதி மாவுக்கு சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி பிசைந்து மாவுடன் பிசைந்து உருட்டி வடையாக தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்க‍வும்.

எல்லா பண்டிகைக்கும் இந்த வடை செய்ய‍லாம். மாலை நேர டிபனுக்கும் கொஞ்சமாக செய்து கொடுக்க‍லாம்.

No comments:

Post a Comment