Friday, March 23, 2012

உப்பிட்டு

உப்பிட்டு - போளி

தேவையானவை
மைதா - 1 4 கிலோ,
ரவை - கைப்பிடி
வெல்ல‍ம் - 1 2 கிலோ
க‌டலைப்பருப்பு - 100 கிராம்
து.பருப்பு - 50 கிராம்
முற்றிய தேங்காய் - 1 துருவிக் கொள்ள‍வும்
ஏலக்காய் - 1 ஸ்பூன் பொடி

காலையிலேயே ரவையைக் கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து, அரை மணி கழித்து மைதாமாவைச்சலித்து, ரவையை அதனுடன் சேர்த்து சிறிது உப்பு, தண்ணீர் விட்டு, புரோட்டா மாவு போல் இளக்க‍மாக பிசைந்து வைக்க‍வும். கொஞ்சம் கொஞ்சமாக எண்ணை விட்டு பிசையவும். இரண்டு மணி நேரம் ஊற வேண்டும்.

க‌டலைப்பருப்பையும் து. பருப்பையும் வேக விடவும். குழைய விடாமல், நசுக்கினால், மசியும் பதத்தில் இருக்க‍ வேண்டும். பிறகு, வடிய விட்டு, தேங்காயை வாணலியில் போட்டு, வதக்கிய பின்னர் வெல்ல‍ம் பொடி செய்து போட்டு, ஏலக்காய் பொடி போட்டு, பூரணமாக வதக்க‍வும். ஆறியபின் பூரணம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, எல்லாவற்றையும் மிக்ஸியிலோ, அல்ல‍து ஆட்டுரலிலோ நைசாக அரைத்து இளக்கமாக இருக்கும். வாணலியில் போட்டு வதக்கி சிறிது கெட்டியாகும் வரை சிறிது நெய் விட்டு வதக்கி எடுத்து, ஆறியபின் ஒரு எலுமிச்ச‍ம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள‍ வேண்டும்.

பிறகு, ஒரு பிளாஸ்டிக் கெட்டி கவர், அல்லது வாழை இலையில், மைதா மாவை அப்ப‍ளம் போல எண்ணெய் தொட்டு, வட்ட‍மாக பரப்பி, அதன் நடுவில் தேங்காய் பூரண உருண்டையை வைத்து மூடி அப்ப‍ளக் குழவி அல்ல‍து, கையால், மெலிதாக தட்ட‍ வேண்டும்.

தோசைக்க‍ல்லில் போட்டு பேப்ப‍ ரை உடனே எடுத்து விடவும். இரண்டு பக்க‍மும் வெந்து சிவந்ததும் (நெய் எண்ணை கலந்து) ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சப்பாத்தி போல் போட்டு எடுக்க‍ வேண்டும். பிறகு மடித்து, ஒரு பேசினில் போடவும். இப்ப‍டியே, எல்லா மைதா மாவையும், பூரி போல் இட்டு, பூரணம் வைத்து, போளி தட்டிக் கொள்ள‍வும். பரிமாறும்போது, 1 ஸ்பூன் நெய் விட்டு சாப்பிட்டால், மிகவும் ருசியாக இருக்கும்.

இந்தப் போளியை, போகிப்பண்டிகை, ஆடிப்பண்டிகை, ஆவணி அவிட்ட‍ம் போன்ற பண்டிகை நாட்களிலும், சுமங்கலிப்பிரார்த்த‍னைக்கும் செய்வார்கள்

No comments:

Post a Comment