Wednesday, June 15, 2011

ஆடி மாதம்

ஆடி மாதம் என்றாலே பண்டிகைகள் வரிசையாக வந்து விடும். ஆடி ஒன்றாம் தேதி, ஆடிப்பண்டிகை. அன்று வாசலில் அன்று வாசலில் மாக்கோலம் போட்டுச் செம்ம‍ண் இட வேண்டும். அன்று சமையலில், இனிப்புப் போளி செய்வார்கள்.(முடியாவிட்டால் ஏதாவது பாயசம் செய்ய‍லாம்).

வடை, பாயசம் எல்லாம் செய்து சாப்பிடுவார்கள். அன்று மாலை, இளம் தேங்காயை வாங்கி வந்து, மேலே உள்ள .தேங்காய் நாரை எடுத்துவிட்டு, வழுவழுப்பாகச் செய்து, ஒரு கண்ணைப் பொத்து, அதில் உள்ள‍ இளநீரை எடுத்து வைத்து, தேங்காய்க்குள், வறுத்த‍ அவல், பாசிப்பருப்பு, வெல்ல‍ம், எள் எல்லாவற்றையும் பொடி செய்து அதில் நிறைய திணித்து எடுத்து வைத்த‍ இளநீரை அதில் ஊற்றி, வாதநாவல் குச்சியை சீவி, அதை அடைப்பார்கள். அதற்கு மஞ்சள் குங்குமம் தடவி, இளம் தணலில், ஓலையை வைத்துச் சுடுவார்கள். அப்படிச் சுடும்போது, உள்ளே இருக்கும், பூரணம் வெந்து தேங்காய் ஒரு வெடிக்கும், அதை அப்ப‍டியே எடுத்து சுவாமி முன்வைத்துப் படைப்பார்கள். திருஷ்டி கழித்து என்பார்கள். அதை மெதுவாக எடுத்து ஓட்டைப் பிரித்து, உள்ளே இருக்கும். பூரணத்தைத் தேங்காயோடு கட்பண்ணி எல்லாருக்கும் கொடுத்துச் சாப்பிடுவார்கள். தேங்காய் சூடும் பண்டிகை, என்பார்கள் இன்றும் கிராமங்களில் இதை விடாமல் செய்து வருகிறார்கள்.

ஆடிமாதம் வரும் 4 வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை வீட்டில் நாமகிரி அம்மனுக்கு மாவிளக்குப் போட்டு, புற்றுக்கும் சென்று மாவிளக்குப் போட்டு, மாரியம்ம‍னுக்கும் மாவடியனுக்கும் பால் வாங்கிக் கொடுத்து விட்டு வருவது வழக்க‍மாக உள்ள‍து. வெளியூரில் உள்ள‍வர்கள் வெள்ளிக் கிழமை அன்று அம்ம‍ னை நினைத்து வீட்டில் மாவிளக்குப் போடலாம்.

No comments:

Post a Comment