Tuesday, July 5, 2011

பதினெட்டாம் பெருக்கு

ஆடிப் பதினெட்டு அன்று காவேரி அம்ம‍னுக்கு மிகவும் பிடித்த‍மான தினம். ஆடி மாதம், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். காவேரி அம்ம‍னுக்கு, பூஜை செய்ய‍ வேண்டும். வீட்டிலிருந்து தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பழவகைகள், காதோலை, கருகமணி, முளைப்பாரி, வெல்லம் எடுத்துக் கொண்டு, காவிரி ஆற்றிற்குச் சென்று, அங்கு மணலை எடுத்து, கரையில் பிள்ளையார் போல மண்ணைக் குவித்து, மஞ்சள் குங்குமம் பூ எல்லாம் வைத்து, தூப தீபம் காண்பித்து, தேங்காய், பழம் வைத்து, நைவேத்தியம் செய்து, காவேரி அம்ம‍ னை, வழிபட்டு, வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி, ஆற்றில் விட வேண்டும். ஒரு சொம்பில் ஆற்று நீரை எடுத்துக் கொண்டு, வீட்டில், பூஜை அறையில் வைக்க‍ வேண்டும்.

அன்று, காவேரி அம்ம‍னுக்கு வளைகாப்பு என்பார்கள். அதனால், வீட்டில், கலந்த சாத வகைகள் செய்து சாப்பிடுவார்கள். கிராமங்களில், மாலையில் ஆற்றுக்குச் சென்று, சித்ரான்ன‍ங்களை வைத்துச் சாப்பிடுவார்கள். வெளியூரில் உள்ள‍வர்கள், வீட்டில், காவேரி அம்ம‍ னை பூஜை செய்து, கொண்டாடலாம்.

No comments:

Post a Comment