Tuesday, October 23, 2012

விஜயதசமி


விஜயதசமி அன்று காலையில் விளக்கேற்றி மறு பூஜை செய்து பூஜையில் வைத்த‍ புத்த‍கம் அல்ல‍து வாத்தியம் வாசிக்க‍ வேண்டும்.

அன்று இரவு பால் நைவேத்தியம் செய்து ஆரத்தி எடுத்து சுவாமியைப் படுக்க‍ வைக்க‍ வேண்டும். அதாவது ராமர் சீதை பொம்மைக்கு நலங்கு வைத்து பத்தியம் பாடி பக்க‍த்தில் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து கற்பூரம் காட்டிப் படுக்க வைக்க‍ வேண்டும்.

அடுத்த‍ நாள் காலை கற்பூரம் காட்டிவிட்டு சுவாமியை பள்ளி எழுச்சி பாடி நிமிர்த்தி வைக்க‍ வேண்டும். பிறகு நமஸ்காரம் செய்து விட்டு நம்முடைய சௌகரியம் போல் பொம்மைகளைத் துடைத்து துணி சுற்றிப் பெட்டியில் பூச்சி உருண்டை நிறைய போட்டு பத்திரமாக உடையாமல் எடுத்து வைக்க‍ வேண்டும்.

No comments:

Post a Comment