Thursday, March 8, 2012

கொழுக்க‍ட்டை

நான்கு நாட்களுக்கு முன்னாலேயே பச்ச‍ரிசியை நனைத்து உலர்த்தி, இடித்து மாவாக்கி வைத்துக் கொள்ள‍ வேண்டும். ஒரு கிண்ண‍த்தில், 1.5 டம்பளர் தண்ணீர் எடுத்துக் கொதிக்க‍விடவும். கொதிக்கும்போது, அரை டம்பளரை எடுத்துவிடவும். 2 spoon அரிசிமாவைக் கரைத்து, கால் ஸ்பூன் உப்பு போட்டு, கொதிக்க‍ வைக்க‍வும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். கொதிக்கும் தண்ணீரைக் கீழே இறக்கி, பச்ச‍ரிசி மாவை அதில் கொட்டி, கட்டி இல்லாமல் கிளறவும். பிறகு, சிறிது நேரம், அடுப்பில் வைத்து, தட்டு போட்டு மூடி அடுப்பைச் சிம்மில் வைக்க‍வும். மாவு வெந்திருக்கும்.

பிறகு, தட்டில் ஈரத்துணியைப் போட்டு மாவை எடுத்துப் போட்டு, துணிபோட்டு மூடி நன்கு அழுத்தி பிசையவும். மாவு ரப்ப‍ர் பந்து போல் ஒட்டாமல் நன்கு பிசைய வரும். பிறகு ஒரு கிண்ண‍த்தில் எண்ணெயை வைத்துக் கொண்டு சின்ன‍ச் சின்ன‍ உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு கிண்ண‍ங்கள் செய்ய‍ வேண்டும்.

பிறகு பூரணத்தை அதில் வைத்து, கிண்ண‍த்தின் மேல்பக்க‍ம் தண்ணீர் தொட்டு அமுத்தி ஒட்ட‍ வேண்டும். அல்ல‍து, மோதகமாக குவித்துச் செய்ய‍லாம். எல்லா மாவையும் இதே போல கொழுக்க‍ட்டையாக செய்ய‍ வேண்டும்.

கொழுக்க‍ட்டை மாவையே சின்ன‍ச் சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, ஒரு கிண்ண‍த்திலை ஒரு டம்பளர் தண்ணீரை கொதிக்க‍ வைக்க‍ வேண்டும். அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, இந்த உருண்டைக ளைப் போட வேண்டும். உருண்டை வெந்து மேலே மிதக்கும். அப்போது, வெல்லம் கொஞ்சம் போடவும். கெட்டியாக ஆகும். கீழே இறக்கி, ஏலப்பொடி தூவி, பால் ஊற்றி இறக்கி விடவும். இது பால் கொழுக்க‍ட்டை.

உப்பு கொழுக்க‍ட்டை பூரணத்தை, வடை தட்ட‍ வேண்டும்.

No comments:

Post a Comment