Wednesday, December 26, 2012

வைகுண்ட ஏகாதசி


மார்கழி மாதம் 30 நாட்களும், விடியற்காலை ஐந்து மணிக்காவது எழுந்து சீக்கிரம் குளித்து விட்டு, சிவன் கோயில், பெருமாள் கோயில்களுக்குச் சென்று வரலாம். இந்த மாதம் வைகுண்ட ஏகாதசி வரும். அன்று விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு சொர்க்க‍ வாசல் மிதித்து விட்டு வரலாம். அன்று ஒருவேளை மட்டும் பலகாரம் செய்ய‍லாம். வயதானவர்கள் உப்பில்லாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவார்கள். அடுத்த‍ நாள் துவாதசி அன்று சீக்கிரமே குளித்து விட்டு ஏழு மணிக்குள் சமைத்து விட்டு சீக்கிரமே சாப்பாடும் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். அன்று அகத்திக் கீரை பொரியல், நெல்லிக்காய், தயிர்ப்ப‍ச்ச‍டி, எல்லாக் காய்களும் போட்டு புளிக்கூட்டு (குழம்பு), பாயசம் கொஞ்சம் செய்வார்கள்.

No comments:

Post a Comment