Wednesday, December 26, 2012

திருவாதிரை


நான்கு நாட்கள் கழித்து திருவாதிரை பண்டிகை வரும். அன்று சிவன் கோயில் காலை 5 மணிக்கு ஆருத்திரா தரிசனம் பார்க்க‍ வேண்டும். அன்று திருவாதிரை களியும், ஏழு காய் கூட்டும், செய்து சுவாமிக்கு பூஜை செய்வார்கள்.

திருவாதிரைக் களி ;
பச்ச‍ரிசி 2 டம்பளர்
பாசிப்பருப்பு அரை டம்பளர்
ஏலக்காய்
முந்திரி
நெய்
தேங்காய்
வெல்ல‍ம் 3 டம்ளர்

அரிசியைக் கழுவி, உடனே வடியவிட்டு, காய்ந்ததும், வாணலியில் போட்டு வறுக்க‍ வேண்டும். பொன் கலராக வரும்போது, அடுப்பை அணைத்து விடவும். பாசிப்பருப்பையும், சுட வைத்துக் கொள்ள‍வும். ஆறியபின், இரண்டையும், ஒன்றாக மிக்ஸியில் போட்டு வெள்ளை ரவை போல பொடித்துக் கொள்ள‍வும். ஒரு கெட்டியான பாத்திரத்தில்,  6 டம்பளர் தண்ணீர் விட்டு, நன்கு காய்ந்ததும், தேங்காயைத் துருவி அதில் போடவும். ஏலக்காய் பொடி செய்து போடவும். ரவையைக் கொட்டி, உப்புமாவைப் போல் வேக விடவும்.

வேறு ஒரு பாத்திரத்தில், வெல்ல‍த்தைக் கரைத்து, கல் மண் போக வடிகட்டி, மறுபடியும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், இறக்கி, வெந்து கொண்டிருக்கும் அரிசி குறுணையில் கொட்ட‍வும். அரை கப் நெய்யைக் காய்ச்சி அதில் விடவும். முந்திரிப் பருப்பு பொன்னிறமாக வறுத்து அதில் போட்டு கலக்க‍வும்.

இதற்கு தொட்டுக் கொள்ள‍, ஏழு காய்கள், ஏழு கொடிக் காய்கள், கிழங்கு வகைகள் பருப்புகள் போட்ட‍ புளிக்கூட்டு செய்து சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment