Showing posts with label ஆவணி. Show all posts
Showing posts with label ஆவணி. Show all posts

Friday, September 7, 2012

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாளே பச்சரிசி இட்லி, கொழுக்க‍ட்டைக்கு, மாவு, பூரணம், எள் சிகிலி உருண்டை எல்லாம் தயார் செய்து வைக்க‍வும். பிள்ளையார் சதுர்த்தியன்று வாசலில் செம்ம‍ண் இட்டு மணைக் கோலம் போட வேண்டும். பூஜையறையில் பலகையில் கோலம் போட வேண்டும். பூஜையறையில், பலகையில் கோலம் போட்டு புது மண் பிள்ளையார் வாங்கி வந்து வைத்து அலங்காரம் செய்து எருக்க‍மாலை, மாவிலை, தும்பை, அரளி, அருகம்புல், மல்லிகை, ரோஜா, தாமரை எல்லா மலர்களும் கொண்டு பூஜை செய்ய‍ வேண்டும். எல்லா பழ தினசுகளும் வைக்க‍லாம். சோளக்கதிர் விளாம்பழம் பிள்ளையாருக்குப் பிடிக்கும். காலையில் மாவைக் கிளறி, கொழுக்க‍ட்டை மோதகம், உருண்டைப் பாயசம், வடை, சுண்டல், சாதம் பருப்பு, பச்ச‍ரிசி இட்லி, எல்லாம் மடியாகச் செய்ய‍ வேண்டும். தேங்காய் உடைத்து, வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்ய‍ வேண்டும். பிறகு ஆரத்தி எடுத்து விநாயகர் ஸ்லோகங்களைச் சொல்லி, பாட்டுக்கள் பாடி முடிக்க‍ வேண்டும். சாயந்திரம் சுண்டல் செய்து எல்லாரையும் கூப்பிட்டு மஞ்சள் குங்குமம், கொடுத்து, சுண்டல் விநியோகம் செய்ய‍லாம்.

அடுத்த‍ நாள் மத்தியானம் பிள்ளையாருக்கு தயிர் சாதம் செய்து, ஒரு துணியில் கட்டி தோள்பட்டையில் தொங்க விட்டு நகையெல்லாம் கழற்றி விட்டு மண்பிள்ளையாரை ஆற்றிலோ, குளத்திலோ கரைத்து விட வேண்டும்.

Tuesday, July 31, 2012

கோகுலாஷ்டமி

ஆவணி அவிட்ட‍ம் முடிந்த எட்டாம் நாள் கோகுலாஷ்டமி வரும். முதல்நாளே, பட்சணத்துக்குத் தேவையான மாவைத் தயார் செய்து வைத்துக் கொண்டு விடவும். அன்று மாலை கிருஷ்ணருக்குப் பிடித்த‍மான அவல் (புளி அவல், வெல்ல‍ அவல்) முக்கியம்.

பட்சணங்களாக முள்ளு முறுக்கு, தேன்குழல், உப்புச் சீடை, வெல்ல‍ச் சீடை, கை முறுக்கு, அப்ப‍ம், பயத்த‍ம்பருப்பு பாயசம், சிகிலி உருண்டை, சூப்பான், கோடுவளை, சுண்டல் எல்லாம் செய்ய‍ வேண்டும். அன்று காலையில் ஒருவேளை மட்டுமே சாப்பிட்டுவிட்டு மாலையில் பூஜை முடிந்து தான் சாப்பிட வேண்டும்.

 பால் பாயசம்,  அவல் https://youtu.be/DRSZcDOblIk

வீடெல்லாம் துடைத்து, வாசலிலிருந்து மாக்கோலம் போட வேண்டும். கிருஷ்ணர் பாதங்கள் வாசலிலிருந்து பூஜை ரூம் வரை போட வேண்டும். கிருஷ்ணர் பொம்மையை வைத்து அலங்காரம் செய்ய‍ வேண்டும். வாசனைப் பூக்க‍ள் வாங்கிப் போட வேண்டும். நகையெல்லாம் போட்டு, சந்தன குங்கும்ம் இட்டு, பூஜை புஸ்தகத்தில் உள்ள‍படி கிருஷ்ணர் அஷ்டோத்திரம் படித்து, அர்ச்ச‍ னை செய்து, நைவேத்தியம் எல்லாம் கொண்டு வந்து வைத்து, தேங்காய்ப் பழம் உடைத்து, வெற்றிலை பாக்கு, பால், தயிர், புளி அவல், வெல்ல‍ அவல், பழங்கள் (நாவல் பழம்), எல்லாம் வைத்துப் பூஜையை முடிக்க‍ வேண்டும்.

கிருஷ்ணர் மேல் பாட்டுக்க‍ள் பாடி, ஆரத்தி எடுத்து நமஸ்காரம் செய்ய‍ வேண்டும். பக்க‍த்தில் உள்ள‍வர்களைக் கூப்பிட்டு, வெற்றிலை பாக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க‍வும்.முடிந்தால், சீடை, முறுக்கு எல்லாம், முதல்நாளே எச்சில் பண்ணாமல் செய்து வைக்க‍லாம். கோகுலாஷ்டமி அன்று அவல், பாயசம், சுண்டல் மட்டும் செய்ய‍லாம்.

Friday, March 23, 2012

ஆவணி அவிட்ட‍ம்

வ‌ரலட்சுமி பண்டிகை முடிந்து 4 நாட்களிலே ஆவணி அவிட்ட‍ம் பண்டிகை வந்துவிடும். வீட்டில் உள்ள‍ புருஷர்கள் புதுப் பூணூல், மாற்றிக் கொள்வார்கள். அன்று வாசலுக்குச் செம்மண் இட்டு கோலம் போட வேண்டும். காலையில் இட்லி, அப்ப‍ம் வார்க்க‍ வேண்டும். அவர்கள் பூணூல் போட்ட‍ பிறகு ஆரத்தி எடுக்க‍ வேண்டும். வீட்டில் போட்டுக் கொள்வதாய் இருந்தால் மஞ்சள் பிள்ளையார் பிடித்து பூஜை செய்த பிறகு, பூணூல் போட்டுக் கொள்வார்கள். பூஜைக்கு உதிரிப்பூ கொஞ்சம், வெற்றிலைப் பாக்கு, பழம் போதும். மத்தியானம், வடை, பாயசம், ஒரு கறி, ஒரு கூட்டு, உப்பிட்டு, சாம்பார், ரசம் என்று பலவகைகள் செய்ய‍ வேண்டும். obottu can be made one day earlier too.

அடுத்த‍ நாள் காயத்ரி ஜெபத்த‍ன்று கலந்த சாதம் தான் செய்வார்கள். தேங்காய்ச்சாதம், தக்காளி புளியஞ்சாதம், எலுமிச்ச‍ பழ சாதம், தயிர் சாதம், அவியல், தொட்டுக் கொள்ள‍ செய்ய‍லாம். அன்று குழம்பு , ரசம் வைக்க‍ மாட்டார்கள். பிஸிபேளாபாத் கூட செய்ய‍லாம்.